Labels

Bitdefender Total Security 2015 மென்பொருளை இலவசமாக தரவிறக்க

Bitdefender Total Security 2015 மென்பொருளை இலவசமாக தரவிறக்க

Bitdefender Total Security 2015 இணை இலவசமாக தரவிறக்கி $35 இணை சேமியுங்கள் உங்களது கணணிகளைப் பாதுகாப்பதற்கான  மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த ஒரு பாதுகாப்பு மென்பொருள் இது ஆகும். இம்மென்பொருளானது உங்கள் கணணியை Virus மற்றும் உங்கள் கணனியில் ஊடுறுவி உங்களது தகவல்களைத் திருடமுற்படும் திருடர்களிடமிருந்து (Hackers) உங்கள் கணணியைப் பாதுகாக்கிறது. இது வீட்டுப் பாவனைக்கு மட்டுமன்றி அலுவலக பாவனைக்கும் பொருந்தும்.

இந்த பதிவின் இறுதியில் இலவசமாக தரவிறக்க கூடிய Bitdefender இன் உத்தியோக முகவரி தரப்பட்டுள்ளது அதன் வழி சென்று உங்கள் ஈமெயில் முகவரியை இட்டு தரவிறக்கி கொள்ளலாம் உங்கள் ஈமெயில் இல் அதன்கான ஒரு வருட இலக்கம் அனுப்பப்பட்டு இருக்கும் அதன் மூலம் உங்கள் மென்பொருளை மாற்றி கொள்ளுங்கள்

முகவரி 

உங்கள் கணினி மூலம் wifi இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்த இலவச மென்பொருள்

இன்றைய கால கட்டத்தில் இன்டர்நெட்  மிக முக்கிரமானதொன்றாகும்  என்பது நாம் அனைவரும் அறிந்த விடையமே அதிலும் எல்லோருடைய வீட்டிலும் குறைந்தது ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களா அதாவது கணினி மொபைல்கள் என்று பலவகை சாதங்கள் இருக்குரின்றன
  
பலர் வீடுகளில் wifi வசதி இல்லாமல் கணினி மட்டும்  இன்டர்நெட்  இணைப்பின் ஊடக பயன்படுத்த பட்டு வருகின்றது  எனவே 


உங்கள் கணனிகளில் இருக்கும் இன்ரநெற் இணைப்பை wifi ஆக்க ஒரு மென்பொருள் இருக்கின்றது  அது பற்றி பாப்போம்  

இதந்மூலம்  வீட்டில் உள்ள அனைத்து wifi சாதனக்களையும்  ஒரே நேரத்தில்  wifi இன்ரநெற் கிடைக்கும் 

முதலில் கீழே உள்ள முகவரில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள் 

சிலர் உங்கள் கணனியில் ஏற்கனவே  நிருவி இருப்பீர்கள்  ஏனெனில் கடந்த   பதிவுடன் தொடர்பு பட்டது       #    அதிக பயனுள்ள ஒரு Browser   #

இப்போது  நீங்கள் நிறுவிய  browser  ஐ  திறக்கவும்  வலது பக்க  மேல் மூலையில் கிழே உள்ள படத்தை பார்க்கவும்


மேலே உள்ள படத்தில் காட்டிய wifi லோகோ வில் கிளிக் செய்து  உங்களுக்கு  விரும்பிய பெயர் மட்டும் கடவுச்சொல் கொடுத்து  wifi இணைப்பை உருவாக்க முடியும் 

windows 7 ல்  மிக நேர்த்தியாக வேலை செய்கின்றது இது ஒரு இலவச மென்பொருள் என்பது குறிப்பிட தக்கது  

        பிடித்திருந்தால்  உங்கள் நண்பர்களோடு பகிந்து கொள்ளுங்கள்

நட்பிலோ எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது.

Subramaniyam Visnu

என் சகோதரன் என் சட்டையை
பயன்படுத்தினால் கூட
எனக்கு பிடிக்காது. ஆனால்
நட்பிலோ
எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது. காதலியோடு பேசுகையில் கூட
முகமூடி அணிந்து பேசுகிறேன்.
ஆனால் என் நட்பின் முன்னாலோ
எவ்வித முகமூடியுமின்றி
நான் நானே இயல்பாய் இருக்கிறேன். கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்..
பேருந்தில் செய்த குறும்புகள்...
மொட்டை மாடி அரட்டைகள்..
பள்ளி மைதான விளையாட்டுகள்...
என அத்தனை நினைவுகளும்
இன்னமும் பசுமையாய் இதயத்தில்.... நண்பனின் கை அருகில் இருக்கையில்
நம்பிக்கையும் கூடவே... வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி, சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழ்ந்த காலங்கள் வரம்.. இன்று வித விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
சைக்கிளில் டபுள்ஸ் போன சுகம்.. ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்போம்.. அப்பாவிற்கு மட்டுமே
கடிதம் வரும் காலங்களில்
எனக்கும் கடிதம் வந்திருக்கிறது என
பெருமைப்பட்ட நேரங்கள்..
ஆம் நண்பனிடமிருந்து வந்த
ஒற்றை கிரீட்டிங் கொடுத்த மகிழ்ச்சி.. பள்ளி நாட்களில் உணவு கொண்டு வராத துசமயங்களில் நண்பர்களிடமிருந் பகிர்ந்து உணவு உண்ட சமயங்கள்
மீண்டும் எப்போது கிடைக்கும்? நண்பர்களிடம் சண்டை போட்டு
பேசாமல் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கையில் இப்போது சிரிப்பாய் இருக்கிறது. பள்ளி முடிந்ததும்
சீருடை தொலைக்கிறோம்.
வளரத்தொடங்கியதும்
நட்பை தொலைக்கிறோம். எத்தனை எத்தனை சந்தோஷமான
தருணங்கள் நட்பில்..
அத்தனையும் தொலைக்கிறோம்
இயந்திரத்தனமான வாழ்க்கையின் இடையே... வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்.
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு என்ன பதில் சொல்ல போகிறோம்? கடவுள்
சங்கடத்தை அனுபவிக்க
காதலை அனுப்புகிறார்...
சந்தோஷத்தை அனுபவிக்க
நட்பை அனுப்புகிறார்... என் இதயத்தின் அத்தனை
அறைகளிலும் நிறைந்து இருக்கும்
என் நண்பர்கள் அனைவருக்கும்
இனிய வாழ்த்துக்கள்...  http://www.sjvisnu.blogspot.com/

விமர்சனம் தேவையில்லை .


விமர்சனம் தேவையில்லை ..என்னை விமர்சிப்பவன் புத்தனும் இல்லை ராமனும் இல்லை ..

நான் நல்லவனோ கெட்டவனோ ...

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் ...

யாருக்காகவும் மாற தயாரில்லை ....

பிடிச்சிருந்தா கூடவே இரு ..பிடிக்கலையா போய்க்கிட்டே இரு ...

உண்மையும் பொய் தான்
உண‌ரும் வ‌ரை...
பெண்மையும் புதிர் தான்
புரியும் வரை...
காத‌லும் சுக‌ம் தான்
பிரியும் வ‌ரை.
 

காதலில்

காதலில் 
தோற்றவர்களால் தான்
கவிதை எழுத முடியுமாம்
அது எப்படி
நான்தான் உன்னிடம்
என் காதலைச்
சொல்லவே இல்லையே...

பழகியது குற்றமா

உன்னுடன் பழகியது குற்றமா
உன்னில் காதல் கொண்டது குற்றமா
உரைத்திடு உண்மையை
உன்னை விட்டு செல்லுகின்றேன்...

உறவுகளை வெறுத்தேன்
உன்னத நட்புக்களை இழந்தேன்
உடையுடன் நடையை மாற்றினேன்
உனக்காக எல்லாம் உனக்காக....

எதுவரினும் எதிர்த்திடுவேன்
என்றும் உன்னை நான் மறவேன்
என்றென்றும் நீ வேண்டுமென்றாய்
என் உயிரே நீ என்றாய்
எல்லாமே வார்த்தைஜாலமா?

என்னை வார்த்தையாலே
எள்ளி நகையாடுகின்றாய்
வலிக்க வலிக்க...!
எட்டாப்பழம் புளிக்குமென்று தெரிந்தும்
என்னை ஏன் காதலித்தாய்??????????